பூஜையில் மணி அடிப்பது ஏன்

0

பூஜையில் மணி அடிப்பது ஏன் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவிலிருந்து சிறு விளக்கம் :





• பூஜையில் மெதுவாக மணி அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

•  கணகணவென்று மணி அடித்தால் தீபம் , ஆரத்தி  காட்டப்படுகிறது என்று அர்த்தம்.

• இரண்டு பக்கமும் விசேஷமாக மணி அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

• மெதுவாக மணி அடித்துக் கொண்டிருந்தால் பகவான் அமுது உண்கிறார் என்று அர்த்தம்.

மணியின் ஓசையை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

மணி அடிப்பதை மஹான்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு இடது கையிலிருந்து மணியை வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது. மணி என்பது சாதாரண விஷயம் அல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் மேலும் தொடரும்.

ஓம் நமசிவாய



Tags :

Pooja , mani , adipathu , yen

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top