செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் பற்றிய பதிவுகள் :

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.

கோயில்களில் நடைபெறக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும்.

பச்சை கற்பூர தீர்த்தம் பல ஆலயங்களில் தீர்த்தமாக தரப்படுகின்றன. நமது செம்பாக்கம் ஸ்ரீமத் ஔஷத லலிதா மஹா திரிபுரசுந்தரி விஸ்வரூப மூலிகை அம்பாள் ஆர்த்திக்கு பச்சை கற்பூரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இத்தலத்தில் வரும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பச்சை கற்பூரம் வாங்கி தருவது வழக்கமாக உள்ளது. பக்தர்கள் தங்கள் முக்கிய முதன்மை பிரார்த்தனைகளை சீட்டில் எழுதி அதனுடன் பச்சை கற்பூரம் சேர்த்து மூலிகை அம்பாள் எதிரில் உள்ள பெட்டியில் போடுவது வழக்கம். இந்த பிரார்த்தனைகளை மஹாராணி ஸ்ரீமத் ஔஷத லலிதா பாதத்தில் நவாவரண பூஜை காலத்தில் தேவி திருவடியில் வைத்து சுவாமிஜி வேண்டுதல் நிறைவேற பிரார்த்திப்பார்கள். கோரிக்கைகள் மூன்று பெளர்ணமிக்குள் நிறைவேற்றி தருவதாக ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top