மஹா சக்தி வாய்ந்த ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சக்தி வாய்ந்த ம்ருத்யுஞ்ஜய மந்திரம் பற்றிய பதிவுகள் :

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்பது ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது.

இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.

இளம் வயதிலேயே மரணத்தின் விளிம்பில் (நோய்வாய்ப்பட்டு) இருப்பவர்களுக்கு தங்களுடைய மரண பயத்தை போக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது.

ம்ருத்யுஞ்ஜய மந்திரம் :

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் !
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் !!

மந்திரத்தின் பொருள் :

ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

சொற்பொருள் :

ஓம் = ஓம்; 

த்ரயம்பகம் = முக்கண்ணுடையவரே; 

யஜாமஹே = நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம்;

சுகந்திம் = நறுமணமும் (எல்லா வளமும்); 

புஷ்டி = ஊட்டமும் (எல்லா நலமும்); 

வர்த்தனம் = பெருகும்படியாகச் செய்பவரே; 

உர்வாருகம் = வெள்ளரிப்பழம்; 

இவ = போல; 

ம்ருத்யோர் = (என்னை) இறப்பின்;

பந்தனாத் = பிடியிலிருந்து; 

முக்ஷீய = விடுவித்து;

மா = எனக்கு; 

அம்ருதாத் = இறவாமையை அருளும்.

தீராதநோய், பயம், கண்டங்கள், விலக தினம் 108முறை ஜெபிக்க வேண்டும். இது சிவனின் மிக மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். 

சகலமும் சிவார்ப்பணம்.

Tag :

#maha mrityunjaya mantra
#maha mrityunjaya mantram
#shivan mantram
#lord shiva

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top