இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2021 மே 26ம் தேதி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்திர கிரகணம் பற்றிய பதிவுகள் :


இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2021 மே 26ம் தேதி நிகழ இருக்கிறது. புத்த பூர்ணிமா கொண்டாடப்படக்கூடிய அற்புத நாளில் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.

26 மே அன்று 100 சதவீதம் என முழு கிரகணமாக நடக்கும் இந்த நிகழ்வு மதியம் 2.17 மணிக்கு தொடங்கி இரவு 7.19 மணி வரை என 5 மணிநேரம் 2 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. கிரகணம் குறித்து நல்ல மற்றும் மோசமான நிகழ்வுகள் குறித்து பல சாஸ்திர நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

​சந்திர கிரகணம் எந்த நட்சத்திரத்தில் ஏற்படுகிறது?

சந்திர கிரகணம் எப்போதும் பெளர்ணமி நாளில் ஏற்படும். அதாவது சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் - சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக காண்கிறோம்.

மே 26ம் தேதி அதிகாலை 4.19 மணி வரை சுவாதி பின்னர் விசாக நட்சத்திரம் நடக்க உள்ளது.
இந்த கிரகணம் மதியம் 2.17 மணிக்கு தொடங்குகிறது. அதாவது குரு அதிபதியாக கொண்ட விசாகம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரங்கள் :

துலாம் மற்றும் விருச்சிக ராசியில் இருக்கும் குருவை அதிபதியாக கொண்ட விசாக நட்சத்திரத்தில் இந்த சந்திர கிரகண நிகழ்வு நடைபெறுகிறது.

அதனால்

விசாகம் நட்சத்திர (பாதம் 1,2,3) - துலாம் ராசி

விசாகம் நட்சத்திர (பாதம் 4) - விருச்சிகம் ராசி

புனர்பூசம் (பாதம் 1,2, 3) - மிதுனம் ராசி

புனர்பூசம் (பாதம் 4) - கடகம் ராசி

பூரட்டாதி நட்சத்திர (பாதம் 1,2,3) - கும்பம் ராசி

பூரட்டாதி நட்சத்திர (பாதம் 4) - மீனம் ராசி

அதுமட்டுமல்லாம் குரு ஆளக்கூடிய தனுசு மற்றும் மீன ராசியினர் இந்த சந்திர கிரகண நிகழ்வால் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

சந்திர கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்?

மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 வரை நடக்கும் என்பதால் இந்தியாவின் சில நிமிடங்கள் மற்றும் சில பகுதிகளில் மட்டும் பார்க்கப்படும். இருப்பினும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்ரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா நாடுகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பகுதியில் இந்த அற்புத நிகழ்வைப் பார்க்க முடியும்.

கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும். 

யோகத்தை அதிகளவில் தரக் கூடியது என்பதால் இந்த நேரத்தில் நம் இறைவனின் திருநாமத்தை ஜெபித்து வந்தால் நம் பாவங்கள் நீங்கப்பெறும். இந்த கிரகண நேரத்தில் நாம் செய்யும்ப பூஜைகள், பிராத்தனைகள் மற்றும் பாராயணத்திற்கு பல மடங்கு சக்தி கிடைக்கும்.

காயத்ரி மந்திரம் சொல்லலாம்

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

இல்லை என்றால் “ஓம் நமோ நாராயணா”, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாய என்ற சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.

கிரகண நேரத்தில் செய்யக் கூடாதது:

கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது. கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் அவர்களின் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சொரிந்தால், அந்த இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அல்லது ஏதேனும் அடையாளம் தோன்றும் என கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் கண்டிப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது. வீட்டை சுத்தம் செய்தல், கூடாது.

கிரகண நாளிலாவது கிரகணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட வேண்டும். கிரகண நேரத்தில் நம் வயிற்றில் உள்ள உணவு நன்றாக செரித்து முடிந்த நிலையில் இருப்பது நல்லது.

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் :

கிரகணம் முடிந்ததும் வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வணங்கவும்.

கிரகணம் முடிந்த பின்னர் பொதுவாக நம் முன்னோர்கள் கடலில் குளிக்க வேண்டும் என்பார்கள். அல்லது நம் வீட்டிலேயே குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு போட்டு அந்த தண்ணீரில் குளிப்பதால் நம்மை சுற்றியுள்ள தீவினைகள் நீங்கும். அதே போல் நம் உடலில் உள்ள நுண் கிருமிகள் மடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top