மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான லலிதையின் 64 க்ஷோடோபசாரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான லலிதையின் 64 க்ஷோடோபசாரங்கள் பற்றிய பதிவுகள் :

1.பாத்யம் – திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.

2.ஆவராணாவரோபணம் — -நகைகளை கழற்றுதல்.

3.ஸுகந்திதைலாப்யங்கம் — வாஸனை எண்ணை தேய்த்தல்.

4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் – குளியலறைக்குச் செல்லுதல்.

5.மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல்.

6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் – ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில் தேய்த்தல்.

7. உஷ்ணோதகஸ்நானம் – வென்னீரில் குளித்தல்.

8.கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்- தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.

9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்.

10. அருணதுகூலபரிதானம் – சிவப்பு பட்டை உடுத்துதல்.

11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.

12. ஆலேபமண்டபப்ரவேசனம் – அலங்கார அறைக்குச் செல்லுதல்.

13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.

14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் – அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.

15. கேசபாரஸ்ய காலாகருதூபம் – தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்.

16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா: – மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள்.

17. பூஷண மண்டபப்ரவேசனம் – நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்.

18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் – முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.

19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.

20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை.

21.ஸீமந்தஸிந்தூரம் -வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்.

22. திலகரத்னம் – நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.

23. காலாஞ்ஜனம் – கறுப்பு மை.

24. வாளீயுகளம் – காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது).

25. மணிகுண்டலயுகளம் – ரத்ன குண்டலங்கள்.

26. நாஸாபரணம் – மூக்குத்தி – புல்லாக்கு.

27. அதரயாவகம் – உதட்டின் சிவப்புசாயம்.

28. ப்ரதமபூஷணம் – மாங்கல்யம்.

29. கனகசிந்தாகம் – தங்கமயமான புளியிலை போன்ற நகை.

30. பதகம் – பதக்கம்.

31. மஹாபதகம் – நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று).

32. முக்தாவலி – முத்துமாலை.

33. ஏகாவளி – ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை).

34. ச்சன்னவீரம் – ஒரு ஆபரண விசேஷம்.

35. கேயூரயுகளசதுஷ்டயம் – ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.

36. வலயாவளி – வளைகள்.

37. ஊர்மிகாவளி – மோதிரங்கள்.

38. காஞ்சீதாம -ஒட்டியாணம்.

39. கடிஸூத்ரம் – அரைஞாண்கயிறு.

40. ஸௌபாக்யாபரணம் -அரை மூடி(அரசிலை).

41. பாதகடகம் -கால்காப்பு.

42. ரத்னநூபுரம் – ரத்னமயமான கொலுசு.

43. பாதாங்குளீயகம் – கால்மெட்டி.

44. ஏககரேபாசம் – ஓர்கையில் பாசக்கயிறு.

45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி.

46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் – வேறொருகையில் நாமக்கரும்பு.

47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.

48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள்.

49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.

50.காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் – காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.

51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.

52. ஆசமனீயம் – ஆசமனம்.

53. கற்பூர வீடிகா -பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)

54.ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் – ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு.

55. மங்களாரார்த்திகம் – தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.

56. சத்ரம் – குடை.

57. சாமரயுகளம் – இரண்டு வெண்சாமரங்கள்.

58. தர்பணம் – கண்ணாடி.

59. தாளவ்ருந்தம் -விசிறி.

60. கந்தம் – சந்தணம்.

61. புஷ்பம் – பூ

62. தூபம் -சாம்பிராணிதூபம்

63. தீபம் – நெய்தீபம்.

64. நைவேத்யம் – நிவேதனம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top