தீபாவளி பண்டிகை 2021 எப்போது?- கங்கா ஸ்நானம் மற்றும் தீபாவளி மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாவளி பண்டிகை பற்றிய பதிவுகள் :

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தீபாவளி பண்டிகை மட்டும், இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

​தீபாவளி எப்போது?

நாடெங்கிலும் உள்ள மக்களால் மிக உற்சாகமாக, மகிழ்ச்சியுடன், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடப்படக்கூடிய அற்புத பண்டிகை தீபாவளி.

இது வெறுமனே மக்கள் கொண்டாடும் பண்டிகை என்பது மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரமும், தனிமனித வருமானமும் மேம்படக்கூடிய பல லட்சம் கோடி வணிக வியாபாரம் செய்யக்கூடிய காலமாக பார்க்கப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையில் விற்றுவிடலாம் என்பதை மட்டுமே நம்பி பல நிறுவனங்கள் தங்களின் பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் உண்டு.

​தீபாவளி பண்டிகை 2021 எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு ஐப்பசி 18ம் தேதி (நவம்பர் 4) வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 4ம் தேதி காலை 4.24 மணி வரை சதுர்த்தசி அதன் பின்னர் அமாவாசை தொடக்கம்.

நவம்பர் 5ம் தேதி நள்ளிரவு 3.51 மணி வரை அமாவாசை நீடிக்கிறது.

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள்.

அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நவம்பர் 4ம் தேதி தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

தீபாவளி அன்று என்னென்ன செய்ய வேண்டும்?

மற்ற விரத தினங்களைப் போல தீபாவளி நன்னாளிலும் விரதமிரம் இருந்து பகவான் கிருஷ்ணரை நினைத்தும், மகாலட்சுமி, குபேரரை வணங்க வேண்டிய நாள்.

தீபாவளிக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.

தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்வது அவசியம்.

கங்கா ஸ்நானம் : தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனை கங்கா ஸ்நானம் என்பார்கள்.

​தீபாவளி பூஜை:

கங்கா ஸ்நானம் செய்த பின்னர் நீங்கள் வாங்கிய புத்தாடைகளுக்கும், பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் இடுங்கள். பூஜை செய்யும் இடத்தில் வைக்கவும்.

கிருஷ்ணர், மகாலட்சுமி, குபேரரின் படங்களை வைத்து அவற்றிற்குப் பூமாலை சாற்றவும். மண் அகல்விளக்கு நெய் தீபத்தை ஏற்றவும்.

சுவாமி படங்களுக்கு முன் 3 இலைகளைப் போட்டு நீங்கள் செய்த இனிப்பு பதார்த்தங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை சுவாமிக்கு படைக்கவும்.

புதிய ஆடைகளை அருகில் வைத்து பூஜை செய்யுங்கள். பொதுவாக இந்த பூஜை தீபம்+ஒளி = தீபாவளி என்பார்கள். அதனால் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல பல அகல் விளக்குகளை ஏற்றி மின் விளக்குகளை அனைத்து தீப ஒளியில் இறைவனை பிரார்த்திப்பது நல்லது.

​பெரியோரை வணங்குதல் :

பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த திருநாளில் சுவாமிக்கு பூஜை செய்த பின்னர், புத்தாடைகளை அணிந்து, மீண்டும் ஒரு முறை இறைவனை வணங்கி விட்டு, வீட்டில் உள்ள பெரியோரிடம் ஆசி பெறுங்கள்.

உங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளைப் பரிமாறுங்கள். அவர்களிடமும் ஆசி பெறுவது மிகவும் சிறப்பும்.

​தீபாவளி அன்று செய்ய வேண்டிய புண்ணிய செயல் :

இந்த முக்கியமான கொண்டாட்டத்தின் போது, ஏழை, எளியோருக்கு, ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காதவர்களுக்கு முடிந்த வரை புத்தாடை தானமும், இனிப்பு, உணவு தானம் செய்வது மகாலட்சுமியின் ஆசி முழுமையாகப் பெறலாம்.

தங்களால் நேரடியாக அன்னதானம் வழங்க இயலாதவர் ஓம் நமசிவாய அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top