வியாழக்கிழமையின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வியாழக்கிழமை விரதம் பற்றிய பதிவுகள் :

வியாழக்கிழமையின் சிறப்புகள்! 

குரு பகவானின் அருள் நிறைந்திருக்கக்கூடிய நாள் தான் வியாழக்கிழமை. கல்வி உட்பட பல கலைகளை கற்றுக் கொள்வதற்கும், அதனை தொடங்குவதற்கும் அற்புதமான நாள்.

பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் நவகிரகங்களில் ஒருவர் ஆவார். இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர்.

அதனால் தான் இவருக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை கடைபிடித்தால் குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

எப்படி விரதம் இருப்பது?

வியாழக்கிழமையன்று அதிகாலையிலே எழுந்து குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமலும், அருந்தாமலும் இருக்க வேண்டும்.

அருகிலுள்ள கோயிலின் நவகிரக சன்னதிக்கு சென்று குரு பகவானுக்கு சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. 

இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

விரதத்தின் பலன்கள் :

குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். 

சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரகதோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தால் அனுஷ்டிப்பதால் தோஷங்கள் நீங்கும். 

தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top