ஜோதிடப்படி இரவு நேர வாராகி வழிபாட்டின் சூட்சமம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாராகி வழிபாடு பற்றிய பதிவுகள் :
    
மாலை நேர வழிபாடுகளில் முதன்மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியை மாலை நேரம் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம் வலிமையும் பெருகும்.

வாராகியை இரவு நேர நாயகி என குறிப்பிடுவோம். அன்னையானவள் இந்த உலகில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்தருளவே அவதரித்தவள். எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள். 

இந்த தீய சக்தி எனும் பேய், பிசாசு, ஏவல், பில்லி இவை அனைத்திற்கும் வலிமை கூடும் நேரம் இரவு நேரம் தான். இந்த காலகட்டத்தில் தான் இந்த தீயவினைகளை மாந்திரீகன் எனும் சத்ரு ஏவி விடுவான்.

அப்போது நம்மை காக்க ஒரு சக்தி வேண்டும். அந்த மாபெரும் ஆற்றல் கொண்டவள் தான் வாராகி, மாந்திரீகம், ஏவல், பேய் பிசாசுகளிடமிருந்து நம்மை காக்கும் வலிமையான தெய்வம் இந்த பிரபஞ்சத்தில் வேறு தெய்வம் ஏதும் இல்லை என்பது தான் உண்மை. 

ஏவல், பில்லி சூனியம், யாவையும் தவிடு‌ பொடியாக்கிடவே கையில் உலக்கை‌ வைத்திருக்கிறாள். 

வாராகி என்ற பெயர் சொன்னாலே இவையாவும் ஓடி ஒளிந்து கொள்ளும், வாராகி வழிபாடு செய்பவர்களை இந்த கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. 

ஆக இந்த கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை விழுந்து காக்க தான் அன்னைக்கு நாம் இரவு நேர வழிபாடுகளை செய்ய வேண்டும்.

“வீற்றிருப்பாள் நவ கோணத்தில் நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றகுச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குல தெய்வம்”

- என்கிறது வாராகி மாலை

9 வடிவங்களில் வீற்றிருந்து காத்து வருபவளாம் அன்னை கலி என்ற ஒன்று நம்மை நெறுங்காமல் பார்த்து இருப்ப அல்லள் எங்கே நடக்கிறது. என்று இரவு பகலாக, கண்விழித்து காத்து கொண்டு தன் பக்தனை பாதுகாப்பவளாம். 

இந்த பாதுகாப்பிற்கு தானே நாம் ஆயிரம் ஆலயம் செல்கின்றோம், இவள் ஒருவரை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும், விடுபடுகின்றோம் என்பது புலப்படுகிறது அல்லவா.

ஜோதிடப்படி இரவு நேர வழிபாட்டின் சூட்சமம்

ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி- கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும், நவகிரகங்களிலே இவர் ‘கர்மகாரகன்’ என்று அழைக்கப்படுகிறான். 

நீதிமான் இவனே செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம் 7 என்ற இவர் காலம் வரும் போது தான்.

இவர் பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்ப இயலாது. ஒரு வனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை சனிபகவானுக்கு உரியது. 

ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு, இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் ‘ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார். 

இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள் இந்த வாராகி , தேவர் மூவர் யாவரும் அடிபணிந்து வணங்க தக்க தெய்வ வடிவானவள் இவளை வணங்கும் யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார் என்பது முற்றிலும் உண்மை, வணங்கி பாருங்கள் அனுபவத்தால் உணர்வீர்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top