விநாயகரின் 12 அவதாரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகரின் 12 அவதாரங்கள் பற்றிய பதிவுகள் :

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. 

1. வக்ரதுண்ட விநாயகர் :

இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் ( சிவவடிவம் ) ஆகியோருக்கு அருளுவார். 

2. கஜானன விநாயகர் :

சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர். 

3. விக்கிரனபராஜர் :

காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர். 

4. மயூரேசர் :

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச் சென்ற போது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர். 

5. உபமயூரேசர் :

சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்த போது அவனை அழித்தவர். 

6. பாலச்சந்திரர் :

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர். 

7. சிந்தாமணி :

கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர். 

8. கணேசர் :

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது , ஐந்து முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர். 

9. கணபதி :

கஜமுகாசுரனை வென்றவர். 

10. மகோற்கடர் :

காசிராஜன் என்ற புகழ் பெற்ற அரசனுக்கு நராந்தகன் , தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர். 

11. துண்டி :

துராசதன் என்ற அசுரனை வென்றவர். 

12. வல்லபை விநாயகர் :

மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top