தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாத சிறப்புகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

சித்திரை தமிழ் வருடத்தில் முதல் மாதம். இந்த மாதத்தின் தொடக்கம் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது. சித்திரை தொடக்க நாள் வருடத்தின் தொடக்க நாள் என்பதால் அன்றைய தினம் அந்த வருடத்திற்குரிய பஞ்சாங்கத்தை வாசிப்பது அவசியம்.

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம் முன்னோர்கள் இந்த தமிழ் வருட பிறப்பு நாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம். இந்த வேப்பம் பூ உடன், வெல்லம், புளி, உள்ளிட்டவை சேர்த்து செய்யப்படும். இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும். இது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கின்றது.

சித்ரா பௌர்ணமி

பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி. இந்த மாதத்தில் வரக்கூடிய ‘சித்ரா பெளர்ணமி’ மிக விசேஷமானது. 2024 சித்ரா பெளர்ணமி ஏப்ரல் 23 ஆம் தேதி வருகிறது. 

இந்த தினத்தில் எமலோகத்தில் நம் புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு தான தர்மங்கள் செய்வதால், அவரின் அருள் கிடைக்கும். நீண்ட ஆயுளை பெறலாம்.

சித்திரை மாத திருவிழாக்கள்

சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா. கிட்டத்தட்ட 12 நாட்கள் நடக்கக் கூடிய இந்த திருவிழா, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்டவையும், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் உள்ளிட்டவை அடங்கியது.

இந்த திருவிழாவை காண மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். சைவ, வைணவ சமயத்தின் ஒற்றுமையைக் காட்டுவதாக இந்த திருவிழா அமைகிறது.

அட்சய திருதியை

எதை செய்தாலும் பல மடங்கு பலன் பெறக் கூடிய நாளாக அட்சய திருதியை பார்க்கப்படுகிறது. இந்த பொன்னான நாள் சித்திரை மாதத்தில் தான் வருகிறது. 

இந்த அட்சய திருதியை நாளில் செய்யக் கூடிய தான தர்மங்கள், பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம் உள்ளிட்டவை நமக்கு பல மடங்கு பலனை தர வல்லது.

இந்த தினத்தில் அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top