சிவ பெருமானின் ஐந்து முகங்கள் உணர்த்தும் தத்துவம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவ பெருமானின் ஐந்து முகங்கள் உணர்த்தும் தத்துவம் பற்றிய பதிவுகள் :

பஞ்சபூதங்களின் வடிவமாகவும், அவற்றின் தலைவனாகவும் விளங்கும் சிவ பெருமான், பஞ்சமுகங்களை உடையவர். ஐந்து என்ற எண் சிவனுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் என ஐந்து சிவ பெருமானுக்குரிய சிறப்புடையதாகும். சிவ பெருமானின் 5 முகங்களும், அவற்றில் இருந்து தோன்றிய 25 முகங்களும் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, ஐந்து முகங்களும் உள்ளது. இந்த ஐந்து முகங்களும் சிவ பெருமானின் படைத்தல், காத்தல் அருளல், மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்து விதமான தொழில்களை குறிக்கிறது. 

இந்த ஐந்து முகங்களில் இருந்து தான் 25 விதமான சிவ வடிவங்கள் தோன்றியது. பலரும் அறியாத சிவனின் 5 முகங்களில் இருந்து தோன்றிய 25 உருவங்கள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமானின் 5 முகங்கள்:

1. ஈசான முகம்
2. தத்புருஷ முகம்
3. அகோர முகம்
4. வாமதேவ முகம்
5. சத்யோஜாத முகம்

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின.

ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. சோமாஸ்கந்தர்
2. நடராசர்
3. ரிஷபாரூடர்
4. கல்யாணசுந்தரர்
5. சந்திரசேகரர்

தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. பிட்சாடனர்
2. காமாரி
3. காலாரி
4. சலந்தராரி
5. திரிபுராரி

அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. கஜசம்ஹாரர்
2. வீரபத்திரர்
3. தக்ஷிணாமூர்த்தி
4. கிராதமூர்த்தி
5. நீலகண்டர்

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:

1. கங்காதரர்
2. சக்ரவரதர்
3. கஜாந்திகர்
4. சண்டேசானுக்கிரகர்
5. ஏகபாதர்

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:

1. லிங்கோத்பவர்
2. சுகாசனர்
3. உமாமகேசர்
4. அரிஹரர்
5. அர்த்தநாரி

சிவ பெருமானின் இந்த 25 வடிவங்களும் ஒவ்வொரு விதமான சிறப்புடையவை. இந்த ஒவ்வொரு வடிவங்களும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியன. இதில் எந்த வடிவத்தை வழிபட்டாலும் சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கும். 

இந்த 25 முகங்கள் தவிர, பைரவர் உள்ளிட்ட 64 வடிவங்களிலும் சிவ பெருமான் காட்சி தருகிறார். இவை அனைத்துமே உலகிற்கே தலைவனாக விளங்கும் சிவ பெருமான் அனைத்தின் வடிவமாகவும் இருந்து பக்தர்களை காத்து, அருள் செய்வதாகவும், அனைத்தின் இயக்கமாகவும் சிவ பெருமானே விளங்கிறார் என்பதையும் உணர்த்துவதற்காகவே இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

வேத, மந்திரமாகவும், அவற்றின் உட்பொருளாகவும் சிவ பெருமானே உள்ளார். அதே போல் உலகின் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களாகவும், அவற்றின் இயக்கங்களாகவும் ஈசனே விளங்குகிறார் என்பதையும் உணர்த்து உட்பொருளே சிவ ரூபங்களாக சொல்லப்படுகிறது. 

1. ப்ராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன் 

எனும் ஐந்து வாயுக்கள் நமது உடலில் இருப்பதை சிவனின் ஐந்து முகங்கள் விளக்குவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், சிவ பெருமானுக்கும் முருகப் பெருமானைப் போல் ஆறு முகங்கள் இருப்பதாகவும், ஆறாவது முகமான அதோமுகம் ஞானியர்களும், சித்தர் புருஷர்களாலும் மட்டுமே அறியக் கூடிய முகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top