முருகப் பெருமான், சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்த சக்தியாகவே பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம் முருகனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
இருந்தாலும் அனைத்து மாதங்களிலும் வரும் சஷ்டி, கிருத்திகை விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த திதி மற்றும் நட்சத்திரத்தில் முருகனுக்கு விரதமிருந்து வழிபட்டால் கேட்ட வரங்களை சுப்ரமணியன் அள்ளித் தருவான் என்பது ஐதீகம்.
முருகனுக்குரிய கந்தசஷ்டி கவத்தை தொடர்ந்து 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் தீராத வினைகள், பாவங்கள் தீர்ந்து சகல விதமான நலன்களும் கிடைக்கும். கந்தசஷ்டி கவசம் தெரியாதவர்கள் சரவண பவ என்ற மந்திரத்தை முடிந்த போதெல்லாம் உச்சரித்தால் நன்மை கிடைக்கும். சரவண பவ என்ற மந்திரத்தின் ஒவ்வொரு எழுந்தும் சக்தி படைத்தது ஆகும்.
வளர்பிறை சஷ்டி
வேலுண்டு வினையில்லை;
மயிலுண்டு பயமில்லை என்பார்கள். இது வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவது இல்லை. இது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மையாகும். கேட்பவர்களுக்கு கேட்கும் வரங்களை தரும் கருணை கடலாகவும், வேலை நம்பி வழிபடுபவர்களுக்கு வினைத் தீர்க்கும் கடவுளாகவும், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு கவசமாக இருந்தும் காப்பவர் கந்தக் கடவுள்.
சஷ்டி விரதம் :
முருகனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் என்பது குழந்தை வரம் வேண்டும் இருக்கப்படுவது என பலரும் நிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமண, வேலை, கடன் தொல்லை, வறுமை என அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சுபிட்சமான வாழ்க்கை ஏற்படும்.
மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை சஷ்டி திதி வரும். இந்த நாட்களில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கோடான கோடி பலன்கள் கிடைக்கும். சஷ்டி திதி வரும் நாளில் காலை, மாலை இருவேளையும் வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு முன் அமர்ந்து, கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் பதிகங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
விரத பலன்கள் :
நாம் என்ன வேண்டுதலுக்காக சஷ்டி விரதம் இருக்கிறோமோ அந்த வேண்டுதலுக்குரிய திருப்புகழ் பதிகத்தை முருகனுக்கு முன் அமர்ந்து பாராயணம் செய்து வழிபட்டு வந்தால், நமது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
செவ்வரளி மலர்கள் சூட்டி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் முருகனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
மற்ற மாதங்களில் வரும் சஷ்டி திதியை விட மாசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அதிக சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த நாளில் அதிகமானவர்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் பகை நீங்கும், எதிர்ப்புக்கள் விலகும்.
வேலை வழிபட்டாலும் வினைகள், அல்லல்கள் அனைத்தும் நீங்கும். மாசியில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு 16 விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சொல்ல வேண்டிய பதிகம் :
முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்க அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மந்திரத்தில் உள்ள 904 வது பதிகத்தை பாராயணம் செய்யலாம். நீயே கதி, அனைத்து செயல்களையும் செய்து என்னை இயக்குபவன் நீ, வினைகள், நோய்கள் என அனைத்தையும் நீக்கிடுவாய் என முருகனை முழுவதுமாக சரணடைவதாக பொருள் கொண்ட பதிகம் இது. இதை படத்தால் சகல தோஷங்கள், வினைகள் நீங்கு, முருகனின் அருள் கிடைக்கும்.
திருப்புகழ் பதிகம் :
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும்...கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும்...பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்...தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்...இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம்...தந்தகோவே
கல்லார் மனத்துவ னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம்...கண்டவேலா
மன்னா தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும்...தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு...தம்பிரானே