கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மஹா சிவராத்திரி நாளில் நடைபெறும் சிவாலய ஓட்டம் என்பது ஆன்மீகமும், பக்தியும், உடல் திடப்பிடிப்பும் ஒருங்கே இணையும் உலகப் புகழ்பெற்ற ஒரு தனித்துவமான வழிபாட்டு நிகழ்வாகும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில், ஒரே இரவில், சிவபெருமானின் அருளைப் பெறும் நோக்கில் இந்த ஓட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த ஓட்டம் முஞ்சிறை முதல் நட்டாலம் வரை சுமார் 110 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சிவாலய ஓட்டத்தின் தொடக்கம் – வரலாற்றுப் பின்னணி
இந்த சிவாலய ஓட்டத்திற்கு பல புராண கதைகள் உள்ளது.
புராணக் கதைகளின் படி, மஹா சிவராத்திரி அன்று தேவர்கள் மற்றும் ரிஷிகள் சிவபெருமானை தரிசிக்க, குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களை சுற்றி வழிபட்டதாக நம்பப்படுகிறது.
மற்றொரு புராண கதைகளின் படி, சிவபெருமான் ஓடி ஒளிந்து திருவிளையாடல் நடத்தி இடங்களாகவும் நம்பப்படுகிறது.
அந்த ஆன்மீக வழிபாட்டு மரபே காலப்போக்கில் “சிவாலய ஓட்டம்” என்ற வடிவத்தை பெற்றது.
இந்த ஓட்டம் வெறும் உடற்பயிற்சி அல்ல சிவ சிந்தனையுடன், நாம ஜெபத்துடன், தன்னலமற்ற பக்தியுடன் செய்யப்படும் ஒரு தவம் போன்ற வழிபாடாகக் கருதப்படுகிறது.
12 சிவாலயங்கள் – ஓட்டத்தின் ஆன்மீக பாதை
சிவாலய ஓட்டத்தின் சிறப்பு என்னவென்றால், 12 சிவாலயங்களை ஒரே இரவில் தரிசிப்பதே ஆகும். இந்த 12 ஆலயங்களும், 12 ஜோதிர்லிங்கங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்த சிவாலய ஓட்டம் கல்குளத்தை சுற்றி,
1. திருமலை மகாதேவர் கோவில்
2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
5. பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
8. மேலாங்கோடு சிவன் கோவில்
9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
12. திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்
பொதுவாக ஓட்டம் நடைபெறும் முறை:
1. முதல் சிவாலயத்தில் தீபம் ஏற்றி, சிவ நாம ஜெபத்துடன் ஓட்டம் தொடங்குதல்
2. ஒவ்வொரு ஆலயத்திலும்
சிவ தரிசனம்
அபிஷேகம் / ஆராதனை
“ஓம் நம சிவாய” ஜெபம்
3. இறுதி ஆலயத்தில் மஹா அபிஷேக தரிசனத்துடன் ஓட்டம் நிறைவு
இந்த ஓட்டம் முழுவதும் “ஓம் நம சிவாய” என்ற நாமம் இடைவிடாமல் ஒலிக்கிறது.
சிவாலய ஓட்டம் – ஓட்டமா? தவமா?
சிவாலய ஓட்டம்:
விரதம் – பக்தர்கள் மஹா சிவராத்திரி விரதம் இருந்து ஓடுவர்.
தவம் – சோர்வு, வலி அனைத்தையும் மறந்து சிவ சிந்தனையில் லயித்தல்.
பக்தி – தனிப்பட்ட வேண்டுதல் இல்லாமல், உலக நலனுக்கான பிரார்த்தனை.
ஒற்றுமை – சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக ஓடுதல்.
இதனால் இது ஒரு ஆன்மீக யாத்திரை என்று கூட அழைக்கப்படுகிறது.
மஹா சிவராத்திரி இரவு – தெய்வீக அனுபவம்
மஹா சிவராத்திரி இரவில்:
சிவாலயங்கள் முழுவதும் தீப ஒளி
நாதஸ்வரம், தவில், பஜனை
ஹர ஹர மகாதேவா என்ற கோஷம்
பக்தர்களின் பாத ஓசையுடன் இணையும் சிவ நாம ஒலி
இந்த காட்சி பார்த்தவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தெய்வீக அனுபவமாக இருக்கும்.
உலகளவில் புகழ் பெற்ற சிவாலய ஓட்டம் இன்று:
தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க குமரி மாவட்டத்துக்கு வருகிறார்கள். இதனால் குமரி மாவட்ட மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் உலகளவில் புகழ்பெற்ற ஆன்மீக நிகழ்வாக மாறியுள்ளது.
சிவாலய ஓட்டம் என்பது:
உடலை ஓடச் செய்து, மனதை சுத்தம் செய்து,
ஆத்துமாவை சிவனுடன் ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பக்தி யாத்திரை.
ஓம் நமசிவாய
சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
