அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள்

அபிராமி அந்தாதி



கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

 

- அபிராமி பட்டர்


அபிராமி பட்டர் அதன் விளக்கம் பின்வருமாறு:-


கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

குறையாத வயது (நீண்ட ஆயுள்)

கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)

தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்) ௧௧ .மாறாத வார்த்தை (வாய்மை)

தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை) அன்னையை ,மனமுருகி வேண்டினால் அனைத்தையும் தருவாள்.

இந்த பதினாறு பேறுகளையும் தரும்படி அன்னை அபிராமியை வேண்டுவோம்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top