சிவபுராணம் பாடல் 8

0

சிவபுராணம் பாடல் 8



வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 

 

பொருள்:


வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.

என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !

பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,

உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !

எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !

அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

 

குறிப்பு:


1.      சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு - பசவண்ணர்.

உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.

2.      வெய்ய - காய்கின்ற/ சூடான; தணிய - குளுமையான.


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top