மயில் இறகின் மகத்துவம்

0
நமது ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் மயில் இறகின் மகத்துவம் பற்றிய பதிவுகள் :

மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகையும் பலர் புனிதமானதாக கருதுகின்றார்கள் வீட்டு பூஜை அரையில் வைப்பதுண்டு.

மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் புனித தன்மை உடையது.

மயில் இறகை நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கும் என்பது ஜீதிகம்.

அதுமட்டுமின்றி மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் தன்மை கொண்டது.

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top