18 புராணங்கள் பற்றிய சிறு விளக்கங்கள்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 18 புராணங்கள் பற்றிய பதிவுகள் :

1. பிரம்ம புராணம்: பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. மேலும் இதில் கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

2. பத்ம புராணம்: காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

3. பிரம்ம வைவர்த்த புராணம்: கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

4. இலிங்கப் புராணம்: பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது.

5. விஷ்ணுப் புராணம்: விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.

6. கருட புராணம்: கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.

7. அக்கினி புராணம்: அக்கினியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது.

8. மத்ஸ்ய (மச்ச) புராணம்: பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.

9. நாரத புராணம்: நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

10. வராஹ புராணம்: திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.

11. வாமன புராணம்: வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.

12. கூர்ம புராணம்: கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது.

13. பாகவத புராணம்: விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.

14. ஸ்கந்த புராணம்: முருகப் பெருமானின் வரலாறு இதில் சொல்லப்படுகிறது.

15. சிவ புராணம்: சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

16. மார்க்கண்டேய புராணம்: மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம் அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

17. பிரும்மாண்ட புராணம்: பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

18. பவிஷ்ய புராணம்: பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள் கலியுகத்தில் நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top