வாரத்தின் ஒவ்வொரு நாளும் நாம் விரதம் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் நாம் விரதம் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றிய பதிவுகள் :

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்குஉகந்த தினமாகும். அதே போல் செவ்வாய் என்றால் ஹனுமான் மற்றும் புதன் என்றால் விநாயகர் என கூறிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று விரதமிருந்து தரிசிக்கவேண்டும் என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஞாயிறு:

நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள். தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும்.

திங்கள்:

இந்த நாட்களில் சிவன் கோவில்களில் அதிகளவிலான கூட்டங்களை காணலாம். காரணம் நீலகண்டனை விரதமிருந்து வழிபட அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடுங்கள். திங்கட்கிழமை சோமவார என்ற மற்றொரு பெயரும் உண்டு. திங்கட்கிழமை சிவனுக்கு உகந்ததினங்களுள் ஒன்றாகும்.

செவ்வாய்:

ஹனுமானை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார். இன்றை தினம் துர்க்கை அம்மனுக்கு மிகவும் உகந்ததாகும். திருமணம் தடைபடுபவர்கள் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளமாகும்.

புதன்:

அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தால் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்க வேண்டும். அப்போது தான் நாம் தொடங்கும் காரியம் தடங்கல் இன்றி நல்ல விதமாக நடக்கும்.

வியாழன்:

விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களை வியாழக்கிழமையில் வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறது. அதேபோல் வியாழக்கிழமைகளில் குரு பகவானை விரதமிருந்து வழிபட உகந்த நாளாகும். இந்த தினங்களில் விரதமிருந்து வழிபாட்டால் திருமண தடை, வேலை இல்லாத பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தீரும்.

வெள்ளி:

துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் இக்கடவுளின்அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

சனி:

சனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை பக்தர்கள் வணங்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top