வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றிய பதிவுகள் :

நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளைத் தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். 

அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும். 

அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ.

பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம் :

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே

நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே

ஸமேகமான் காம காமாய மஹ்யம் !

காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !

குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

பொது பொருள் :

அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியைத் தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதைக் கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களைப் போற்றுகிறேன்.

மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் .

நாம் குபேர சம்பத்துகளுடன் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார். 

இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top