மார்கழி மாத பக்தியின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத பக்தியின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :
 
மார்கழி மாதம் என்றாலே கடவுள் வழிபாட்டுக்கான உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. 

மார்கழி மாதத்தில் தான் நம் உடலுக்கு அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் கோவில்களில் அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

மார்கழி மாத சிறப்பு:

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் பெண்கள் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது இன்றும் வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பே பூஜை, ஆராதனை நடத்தப்படும்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

சுத்தமான காற்று:

நமது உடலில் பொதுவாக 80% ஆக்சிஜனும், 20% கரியமில வாய்வும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நவீன காலத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து பல நோய்களை ஏற்படுத்துகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்று வேறு எந்த மாதத்திலும் கிடைக்காது.

அதனால் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

புண்ணியம்:

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தானங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் செய்யும் தானங்கள் உங்களுக்கு பெரிய பாக்கியத்தை கொண்டு சேர்க்கும். மார்கழி மாதம் என்றாலே அதிக குளிரை உடையதாக இருக்கும்.

இந்த காலத்தில் வசதி இல்லாத ஏழை எளியவர்கள் உண்பதற்கு உணவு, உடுக்க உடை, இரவு தூங்கும் பொழுது இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மார்கழி மாதத்தில் குளிரை போக்க கம்பளி போர்வையை தானமாக வழங்கலாம். இந்த தானம் செய்வதன் மூலம் நிறைய புண்ணியங்கள் உங்களை தேடி வந்தடையும். இதனால் இம்மாதத்தில் உங்களால் முடிந்தவரை யாராவது ஒருவருக்காவது இது போல் கம்பளி தானம் செய்து வாருங்கள்.

மார்கழி கோலம் போடுவதன் நன்மை:

ஒரு சிலர் மார்கழி மாதத்தில் ஏற்படும் குளிர்க்கு பயந்து விடியற்காலையில் எழுந்து வாசலில் கோலம் இடாமல் இரவு தூங்குவதற்கு முன்பே கோலம் போட்டுவிடுவார்கள். இரவு கோலம் போடுவதால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்க போறதில்லை.
 
மார்கழி மாத அதிகாலையில் கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காகவே வாசலில் கோலம் போடப்படுகிறது. பச்சரிசியில் கோலம் இடும்போது எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மூலம் நமக்கு புண்ணியம் சேரும்.

மார்கழி மாத விழாக்கள்:

மார்கழி மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற சிறப்பான விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள். அனைத்து செல்வங்களையும் பெறலாம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top