சனியில் கடுமையான பார்வையில் இருந்து தப்பிக்க செல்ல வேண்டிய கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனியில் கடுமையான பார்வையில் இருந்து தப்பிக்க செல்ல வேண்டிய கோவில் பற்றிய பதிவுகள் :

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் தனி சன்னதி உடன் அருள்பாலிக்கிறார், சனீஸ்வர பகவான். 

இத்தலத்தில் சூரியனின் மனைவிகளான உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருவரும் திருமியச்சூரில் உள்ள மேகநாதரை நோக்கி புத்திர பாக்கியம் வேண்டி தவம் செய்தனர்.

அப்போது இறைவன், நீங்கள் இருவரும் கணவரோடு இருந்து மேற்கே உள்ள ஈசனை வழிபட்டால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று வரம் அளித்தார். அதன்படி சூரியன், உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் மேகநாதசுவாமி கூறிய இடத்திற்கு சென்று சிவபூஜை செய்து வழிபாடு செய்தனர்.

சிறப்பு வாய்ந்த இந்த மங்கல சனீஸ்வர பகவான் ஆலயம், மற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தையும் விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top