பொங்கல் பண்டிகையின் பூஜைக்கான நேரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பொங்கல் பண்டிகையின் பூஜைக்கான நேரம் பற்றிய பதிவுகள் :

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. 

தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தை பொங்கல் பண்டிகை. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி, உத்தராயண, லோரி என கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கல் 2022 எப்போது?

• ஜனவரி 13 (மார்கழி 29) வியாழக் கிழமை - போகி பண்டிகை

• ஜனவரி 14 (தை 1) வெள்ளிக் கிழமை - தைப் பொங்கல்

• ஜனவரி 15 (தை 2) சனி கிழமை- மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம்

• ஜனவரி 16 (தை 3) ஞாயிறு - காணும் பொங்கல்

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

தை 1ம் தேதி வெள்ளிக்கிழமை எனும் மகாலட்சுமியின் அம்சமான நாளில் வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுப ஹோரைகள் இருப்பதோடு, அன்று வரக்கூடிய நல்ல நேரமான காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10 மணி வரை சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும்.

சூரிய வழிபாடு:

சூரியன் மகர ராசிக்குள் பிரவேசித்துச் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை தை மாதம் என குறிப்பிடப்படுகிறது. இதனால் தான் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு தன் ஒளியால் உதவிய, நல்ல கால சூழலை ஏற்படுத்திக் கொடுத்த சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் பகல் பொழுது அதிகரிக்கக்கூடிய காலம் தொடங்கும்.

சூரிய பகவானை வழிபடும் பண்டிகை என்பதோடு, விவசாயத்திற்கு உதவிய மாடுகள், கால்நடைகளைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல், தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பொங்கலுக்கு முந்தைய தினத்தில் பழையன கலைந்து, புதியதைப் புகுத்தும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சங்கராந்தியின் பெருமை:

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படும் கும்பமேளா, மகர சங்கராந்தி தினத்தில் தான் துவங்குகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top