டிசம்பர் 6, 2022 கார்த்திகை தீபத்திருநாள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கார்த்திகை தீபம் பற்றிய பதிவுகள் : 

இந்த ஆண்டு உலகம் முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஓணம், தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று அனைத்து மக்களும் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி ஜோதி ரூபமாக சிவனை வழிபடுவது வழக்கம்.

இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதுதான் திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்படும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இந்த தீபம் ஏற்றப்படும்.

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது. 

இந்த திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும்.

தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் துன்பங்கள் அண்டும்.

ஒரு முகம் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், இரு முகம் ஏற்றினால் குடும்பங்களில் நன்மை உண்டாகும், 3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும், 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், 5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. 27 வைக்கமுடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.

Published by: Anupriyam K

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top