அரச மர வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அரச மர வழிபாடு பற்றிய பதிவுகள் :

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. 

மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

எந்த நேரத்தில் அரச மரத்தைச் சுற்றலாம் ?

சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

மற்ற நாட்களைவிட , சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். 

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். 

எல்லா நாட்களிலும் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாம். நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :


திங்கட்கிழமை :

சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். 

செவ்வாய்க்கிழமை :

துர்க்கை அம்மனை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்யோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் கிடைக்கும். 

புதன்கிழமை :

அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்.

வியாழக்கிழமை :

தட்சிணாமூர்த்தியை வணங்கிய பின்பு, அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும். 

வெள்ளிக்கிழமை :

லட்சுமியை வணங்கி, அரச மரத்தை வலம் வந்தால் ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் உண்டாகும். 

 சனிக்கிழமை :

அன்று வலம் வருபவர்களுக்கு கஷ்டங்கள் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.
  
அரசமரத்தின் இலை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.


திருமணமாகாத ஆண்கள்/பெண்கள் சுற்றி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

எல்லா தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top