கிரக சேர்க்கையும் ராகுகால பூஜையும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இராகு கால பூஜை பற்றிய பதிவுகள் :

நவகோள்களில் ஒன்றான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்படும் துர்க்கையாகும். ஒவ்வொரு நாளும் நல்லன செய்வதற்கு தகாத விசக்கடிகையாக 1.30 மணி நேரம் இராகு காலமாகக் கருதப்பட்டு வருகிறது. 

அந்த இராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கைக்கு நறுமண மலர்மாலை அணிவித்து, தூப தீப நைவேத்தியத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகியவற்றை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிறவாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கு பயன்படுத்தி ஸ்ரீ துர்க்கையை பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை அம்மனுக்கு விஷேசம்.

செவ்வாய்க் கிழமையன்று நல்ல மஞ்சள் நிறமுள்ள ஐந்து எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றை அம்பாளின் திருவடிகளில் பிழிந்துவிட்டு, எலுமிச்சைத் தோல்களை எதிர்புறமாக மடக்கி கிண்ணம் போல் அமைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும். 

இவ்வாறு ஐந்து எலுமிச்சை மூடிகளின் மொத்தம் பத்து விளக்குகள் செய்யலாம். அதில் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு ஒன்பது விளக்குகளை மட்டும் அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும். ஆயுள்பலம் பெருக நல்லெண்ணெய்க்குப்பதில் இலுப்பை எண்ணெயை பயன்படுத்தலாம்.

இந்த ராகு கால பூஜையின் போது இராகு கால துர்க்காஷ்டகம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாராணாஷ்டகம், ஸ்ரீ லலிதா சஸ்ர நாமம் முதலியவற்றை பக்தி பெருக்கோடு பாராயணம் செய்தால் அம்பாளின் அருளைப் பெறலாம். 

பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மாங்கல்ய தோஷம் இருந்தால் கணவன் அடிக்கடி நோய் வாய்ப்படுவான் அல்லது கணவனுக்கு தீராத நோய் ஏற்படும். அல்லது அந்தப் பெண் இளம் வயதிலேயே விதவையாக நேரிடும். 

சில பெண்களுக்கு கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ நேரிடும். இத்தகைய பிரச்சனைகளுடைய பெண்கள் செவ்வாய் கிழமை ராகு கால பூஜையைக் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் விருத்தியாகும்.

ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும். அடிக்கடி கருச்சிதைவு உண்டாகும். பிறந்த குழந்தைகள் அற்ப ஆயுளுடன் இறக்கும். இது போன்ற பிரச்சனை உடையவர்களும் செவ்வாய் கிழமை ராகு காலப்பூஜை செய்யலாம்.

மனநிலை பாதிக்கப்பட்டோர், அடிக்கடி விபத்துக்குள்ளானவர்கள், துஷ்ட தேவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும்.

ஆண்கள் செவ்வாய் கிழமையன்று விரதமிருந்து ராகு காலத்தில் துர்க்கையை வழிப்பட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

கிரக சேர்க்கையும் ராகுகால பூஜையும் :

சூரியன் 10 ராகு - ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் கர்ப்பேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.

சந்திரன் 10 ராகு - திங்கள்கிழமை ராகு காலத்தில் கருமாரியம்மனை பூஜிக்க வேண்டும்.

செவ்வாய் 10 ராகு - செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

புதன் 10 ராகு - புதன்கிழமை ராகு காலத்தில் வராமூர்த்தியை பூஜிக்க வேண்டும்.

குரு 10 ராகு - வியாழக்கிழமை ராகு காலத்தில் ருத்திரனை பூஜிக்க வேண்டும்.

சுக்கிரன் 10 ராகு - வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காமாட்சியை பூஜிக்க வேண்டும்.

சனி 10 ராகு - சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவரை பூஜிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top