விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு பற்றிய பதிவுகள் :

பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர் தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கின்றோம்.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினைகள் யாவும் நெருங்காது. அப்படி அனைவராலும் போற்றும் விக்ன விநாயகரை பூஜிக்கும் போது அவருக்கு பிடித்த அருகம்புல் கொண்டு அவரை தரிசிப்பது ஏன் என்று தெரியுமா? இதற்கு ஒரு புராணக்கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் கோபத்தில் விழுங்கி விட்டார். அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அங்கு வெப்பமடையச் செய்தான்.

விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை, அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது.

அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இதன் காரணமாகவே விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியத்துவம் பெறுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top