கோவிலில் தெய்வங்களை வழிபடும் முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவிலில் தெய்வங்களை வழிபடும் முறைகள் பற்றிய பதிவுகள் :

முதலில் தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

கோபுர வாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியப்படியே கோவிலுக்குள் நடக்க வேண்டும். ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம். 

பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன். அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவமாகும்.

பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் கொட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும். தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோவில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சித் தரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும். ஆலயத்தில் கண்களை மூடி இறைவனை தரிசிக்க கூடாது. அவன் அழகில் மயங்க வேண்டும்.

பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வணங்க வேண்டும். முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும், நவகிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாட்டின் நிறைவாக சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்து, இறை சிந்தனையுடன் வெளியேற வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top