சிவாகமப் பொருள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவாகமப் பொருள் பற்றிய பதிவுகள்:

சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு உரிய ஆதார நியமங்கள் முறைகளைக் கூறுவதே சிவாகமம். 

இருபத்தெட்டு வகைகளாக உலகிற்கு அளித்தவர்கள் முனிவர்கள்.

1. கவுசிகர், 
2. காசிபர், 
3. பரத்வாஜர், 
4. கவுதமர் 

இவர்கள் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களான, ஈசானம் தத்புருஷம், கோரம், வாமதேவம், சத்யா ஜாதம் என்ற ஒவ்வொரு திருமுகங்கள் வழியாகக் கேட்டறிந்து, காமிகம் முதல் வாதுளம் வரை ப்ரணவர், சுதாக்யர், சுதீர்த்தர், காரணர், சுசிவர், ஈசன்குக்குமர், காலர், அம்பி, தேசிகர் ஆகியோர் மூலம் பரவியது. 

ஆகமம் என்பதற்கு சிவபெருமானை பூஜை செய்கிற விதிகள் சிவபோதனை நூல்கள் எனினும் சைவர்கள் இதை ஆ-சிவஞானம் க-மோட்சம், ம-மலநாசம் என்றும் கூறுகின்றனர். 

மேலும் பசு, பதி, பாசம் ஆகிய முப் பொருட்களைக் கூறுவதே ஆகமம் என்று சைவ மறையவர் பொருள் கொள்வர். சிவாகமத்தை விவரிக்கும் ஆகம விதி நூல்களில் ஒன்றான 28வது வாதுன ஆகமத்தில் சொல்லப்பட்ட உண்மையான பொருள் இதுவே. 

ஆகமம் என்ற சொற்கோர்வையின் பொருள் ஆ&ஆகதம் சிவபத்ராஸ்ச & சிவபெருமானின் வாக்கிலிருந்து வந்தது. க&கதம்து கிரிஜா சுகதென & கிரிஜா என்ற பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது. 

மதஞ்ச வாசுதேவஸ்ச & வாசுதேவன் என்ற மகா விஷ்ணு இது தன்னுடைய மதம் என்று ஏற்றுக் கொண்டது. தஸ்மாத் ஆக & ஈரித:& இம்மூன்று முதல் எழுத்துக்களும்உணர்த்தும் பொருளே சிவாகமம் ஆகிறது. 

28 ஆகமங்களில் முதல் 10 சிவபேதம் என்றும் மற்ற 18&ம் ருத்ரபேதம் என்றும் வகைப்படுத்தப்பட்டு அவற்றில் சிவாகம ரகசியங்கள் அடங்கி உள்ளன. 28 வகை.

ஆகமங்களாவன: காமிகம், யோகஜம், சிந்தயம், காரணம் அஜிதம், தீப்தம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதகம், விஜயம், தைவ நிஸ்வாசம், ஸ்வயம்புவம், அத்நலம், வீரம், ரவுரவம், மகுடம், விமலம் சந்திரக்ஞானம், பிம்பம், ப்ரோத்ஹீதம், லலிகம், சித்தம், சந்தானம் சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top