தெய்வங்களுக்கு உகந்த செவ்வரளி மலர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தெய்வங்களுக்கு உகந்த செவ்வரளி மலர் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு மலருக்கும் தனி மணம், குணம், மற்றும் சிறப்பு உண்டு. அவற்றின் தன்மையை கொண்டு ஒவ்வொரு மலர்களையும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு சூட்டலாம். செவ்வரளி மலரை எந்தெந்த தெங்வங்களுக்கு சூட்டலாம் என்று பார்ப்போம். 

செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும், வீரபத்திரருக்கும் செவ்வரளி மலரை அணிவித்து வழிபட்டால் அனுகிரகம் பெறலாம். 

செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளை பழம் நிவேதனம் செய்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடைய உறவு வலுப்படும்.

 பஞ்சமி, அஷ்டமி திதியில் வராஹி அம்மனுக்கு இம்மலரை பயன்படுத்தினால் மிக நல்ல பலன் கிடைக்கும். 

பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது. உக்ரமலர் என்பதால் பார்த்து சூட்ட வேண்டும். 

ஸ்ரீகாளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம். அமாவாசை, பௌர்ணமி, திங்கட்கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். 

ஸ்ரீதுர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம். 

எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும். கனியை காலால் மிதித்து திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி சொருகிய பின்னரோ அல்லது எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.

பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும். இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி பயன்படுத்தக்கூடாது. 

தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இதுபோன்று ஏதாவது பரிகாரத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

செவ்வரளி செடியை வீட்டில் வளர்க்கக்கூடாது. வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும். ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும். இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க நேரிடும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top