கனிவான வாழ்வு தரும் கருட பகவான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கனிவான வாழ்வு தரும் கருட பகவான் பற்றிய பதிவுகள் :

திருப்பதியில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்று கருடாசலம் எனப் போற்றப்படுகிறது. எந்த ஒரு முக்கியமான செயலைத் தொடங்கும்போதும் கருடனை தியானித்து கருட துதியைக் கூறினால் காரியசித்தி தரும் எனக் கூறப்பட்டுள்ளது.

சுவாமி தேசிகர், கருடனை உபாசனை செய்தல் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என, தன் `கருடதண்டகத்தில்’ அருளியுள்ளார். கருடன் அருள் பெற்றால் நல்ல ஞாபகசக்தி, வேதாந்த ஞானம், பேச்சாற்றல் கிட்டும் என `ஈச்வர சம்ஹிதை’ சொல்கிறது.

கருடன் அருள் பெற்றால் பல அபூர்வ சக்திகள் சித்திக்கும் என்று பத்மபுராணத்தில் 4 துதிகளில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளுடன் கருவறையில் எழுந்தருளச் செய்து கருட பகவானுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

மன்னர்குடியில் நாச்சியார் சந்நதிக்கு எதிரில் கருடனின் தாயாரான சுபர்ணீயை தரிசிக்கலாம். அதர்வண வேதங்களில் வரும் 32 வித்யைகளில் கருட வித்யையே முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவின் சின்னம், கருடன். அதனால்தான், அந்நாடு செல்வச் செழிப்புடன் திகழ்கிறது என்பார்கள்.

கருடனின் பார்வைக்கு உள்ள சிறப்பை ஸௌந்தர்யலஹரியில், ‘கிரந்திமங்கேப்ய:’ என்ற 21-ம் துதியில் ஆதிசங்கரர் விளக்கியுள்ளார். `கார்க்கோடகன்’ எனும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனி தோஷம் போகும் என்பது ஐதீகம். அந்த கார்க்கோடக நாகம் கருடனுள் அடக்கம். வீட்டின் முன் கருடக் கிழங்கை கட்டினால் அந்த வீட்டில் எவ்வித விஷ ஜந்துக்களும் நுழையாது என்பார்கள்.

எல்லாவிதமான தர்ம ரகசியங்கள், நீதிகள், ஆத்மா கடைத்தேற வழி அனைத்தையும் கருடபுராணத்தில் அறியலாம். கருடனைக் கொடியாகக் கொண்டதாலேயே கிருஷ்ணர் சிசுபாலனை வென்றதாக பாகவதம் கூறுகிறது. 

மௌரியர்களின் அதிர்ஷ்டக் கடவுளாக கருடபகவான் வணங்கப்பட்டிருக்கிறார். குமாரகுப்த, சமுத்திரகுப்த மன்னர்கள் காலத்தில் செலாவணியான பொற்காசுகளில் கருட முத்திரை இட்டதால் சுபிட்சம் மேலோங்கியது என்கிறது வரலாறு.

வானத்தில் கருடனைப் பார்ப்பதும், கருடன் குரலைக் கேட்பதும் சுபசகுனமாகக் கருதப்படுகிறது. மங்களவாத்தியத்தின் 16 வகையான தொனி, ஆதோத்யம் எனப்படும். அதன் நாதமே கருடன் எழுப்பும் ஓசையாகும்.

வைணவர்கள் திருவாராதன மணியின் முடியின் மேல் சுதர்சனாழ்வாரோ, கருடாழ்வாரோ எழுந்தருளியிருப்பது வழக்கம். கஜேந்திரன் எனும் யானையை முதலையிடமிருந்து கருடாரூடராக பெருமாள் காப்பாற்றியது ஒரு அக்ஷய த்ரிதியை தினத்தன்று.

கருடனின் புகழ்பாடும் கருடப்பத்து துதியை வீட்டின் நுழைவாயிலில் பொருத்தி வைத்தால் அந்த வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top