ஆலயத்தில் பிரகார வலமும் அதன் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயத்தில் பிரகார வலமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் :

நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது பிரார்த்தனையை முடித்துவிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறோம். நாம் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்!

பலன்கள் :

✓ ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று அர்த்தம்.

✓ மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.

✓ ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.

✓ ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.

✓ ஒன்பது முறை வலம் வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.

✓ பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

✓ பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.

✓ பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டாகும்.

✓ பதினேழு முறை வலம் வந்தால் தானியம் சேரும்.

✓ பத்தொன்பது முறை வலம் வருவதால் பிணிகள் நீங்கும்.

✓ இருப்பத்தொரு முறை வலம் வருவதால் கல்வி விருத்தியாகும்.

✓ இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.

✓ நூற்றியெட்டு முறை வலம் வந்தால் புத்திர பேறு கிடைக்கும்.

✓ இருநூற்றுயெட்டு முறைவலம் வந்தால் யாகம் செய்த பலன் உண்டாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top