வாழ்வில் அனைத்து வளங்களையும் தரும் சண்டிகேஸ்வரர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்வில் அனைத்து வளங்களையும் தரும் சண்டிகேஸ்வரர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சிவ தலங்களில் நந்தியும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். சிவபெருமானின் மெய்க்காவலர் நந்தி என்றால், சிவபெருமானின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர்.

சிவபெருமானின் பிரதிநிதியான சண்டிகேஸ்வரருக்கு வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர்.

மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவபெருமானின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது.

இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டுணர்ந்து, அவைகளை அவரவர்களின் முன் ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம்.

ஆகவே, சிவன் கோவிலுக்குச் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.

யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும்.

எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக்கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றார்கள் பெரியவர்கள்.

ஆனால், நான் ஆலயத்திலிருந்து எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்பதை அவருக்கு காட்டும் வண்ணம் இரு கைகளையும் சப்தமில்லாமல் துடைத்துக் காண்பிக்க வேண்டும்.

இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும்.

இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமி ஆகும்.

புதன்கிழமைத்தோறும் இவரை வணங்கி வர வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top