பஞ்சமுக வழிபாட்டு மந்திரங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்சமுக வழிபாட்டு மந்திரங்கள் பற்றிய பதிவுகள் :

கிழக்கு முகம் - ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

தெற்கு முகம் - நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

மேற்கு முகம் - கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

வடக்கு முகம் - வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

மேல்முகம் - ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

நினைத்த காரியம் இனிதே நிறைவேற

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.

இதை பூஜையில் 108 முறை கூறவும்.

சகல கலைகளில் தேர்ச்சி, நினைவாற்றலுக்கு

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரனாத் பவேத் இதை தினமும் 11 முறை கூறவும்.

நவக்கிரகங்களின் தோஷம் நீங்க

ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா ஹர்தா ஸமீரஜா:

இதை தினமும் காலையில் 11 முறை கூறவும்.

எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்க

ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:

இதை தினமும் 12 முறை கூறவும்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட

ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ்ம ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந் அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு:

இதை காலை, மாலை 51 முறை கூறவும்.

தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற

ஓம் காத்யாயனி மஹாமாயே மஹா யோஹீன் யதீச்வரி நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:

இதை காலை 12 முறை கூறவும்.

வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது

(இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)

ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.

இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.

எல்லா விஷங்களும் நீங்க

ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

சகல செல்வங்களும் பெற

ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ ஹனுமதே லம் லம் லம் லம் லம் ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.

பகைவர்களின் பயம் நீங்க

க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top