பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

அம்பாளை சரண் அடைந்தால் ஸகல வரங்களும் பெறலாம்!

ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம் மற்றைய ஸ்தோத்ரங்கள் போல் மனிதர்கள் யாரும் படைக்கவில்லை. ஈச்வரியின் வசினி தேவதைகள் மூலம் லோகத்துக்கு வந்தது! ஹயக்ரீவர் அகஸ்த்ய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமீயச்சூர் என்ற லலிதாம்பிகையின் சன்னிதியில் அவருக்கு உபதேசம் செய்தார். 

ஏனைய ச்லோகங்கள், ஆதிசங்கரர், காளிதாஸர், அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர், வரகவி பாரதியார், அபிராமி பட்டர் போன்றஅம்பாள் உபாஸகர்களால் உலகத்துக்குக் கொடுக்கப்பட்டவை. 

ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம் ஒன்றே எல்லாவற்றுக்கும் மூத்த ஆதி ச்லோகமாகும். இதனைப் பாராயணம் செய்வோருக்கு சகல சௌபாக்யங்களும் குறைவின்றி நிரந்தரமாகக் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

அம்பாளை சிவந்த வண்ணமாக சிந்தூர வண்ணமாக த்யான ச்லோகத்தில் ஆரம்பிக்கிறோம். ஜகத்தைக் காக்க வந்தவளை உதிக்கும் சூரியனாக வர்ணிப்பதுதான் பொருத்தம்.

 ராராஜேஸ்வரி, காமாக்ஷி, லலிதாம்பிகை, திரிபுரசுந்தரி இவர்களின் நிறம் செவ்வண்ணமாகச் சித்தரிக்கப்படுகிறது. மற்ற மூர்த்தங்களை, அம்பாளை, கரிய வண்ணமாக சித்தரிக்கிறார்கள்.

அபிராமி பட்டர் சிந்துர வண்ணத்தினாள் என்றே விளிக்கிறார். அதேபோல் சிந்தூராருண விக்ரஹாம் என த்யான ச்லோகம் தொடங்குகிறது. 

உதய சூரியனின் சிவப்பு! அருண என்றால் சூரியன். சிந்தூராருண விக்ரஹாம் என்றால் உதய சூரியனின் அழகுச் சிவப்பு மேனி கொண்டவள் எனப்பொருள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top