சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை பற்றிய பதிவுகள் :

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, காரியத் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. 

அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையல் வைத்து பெருமாளை வழிபடுகின்றனர்.

கர்ம பலன்களை அழிக்கும் சனிபகவான், கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் பிறந்தார். சனி பகவானை ஆயுள் காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். 

சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக ஆனது.

ஆகையால் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமைகளும் பக்தர்கள் அனைவரும் பெருமாளை வழிபட்டால் சந்தான பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்கும். 

மேலும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் பெருமாள் கோவில்களில் துலாபாரம் வழிபாடு நடைபெற்று வருகிறது. 

மேலும் சனிக்கிழமையில் பெருமாளை பக்தர்கள் வழிபட்டால் அவர்களுக்கு பிடித்த சனி தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top