புரட்டாசி மாத ஏகாதசி பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி ஏகாதசிகளும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அஜா’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தான் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம் நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர். 

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்ம நாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். 

நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். 

புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top