கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கடவுளுக்கு கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய பகிர்வுகள் :


செங்கல்பட்டு அருகே திருவடி சூலம் என்ற இடத்தில் பிரமிக்க வைக்கும் விதமாக ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. 

திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம் மறுவி தற்போது திருவடி சூலம் என அழைக்கப்படுகின்றது.

கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீசக்கரம் போல தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, ஹனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பெளர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

ஸ்ரீ மகா ருதர பைரவர்:

சிவனின் 64 திருமேனிகளில் ஒருவர் தான் பைரவர். பிரம்மாவின் தலைக்கணத்தைப் போக்க் ஔருவாகப்பட்டவர் தான் இந்த பைரவர். பைரவர் காவல் தெய்வமாக பார்க்கப்படுகின்றார். உலகத்தில் உள்ள உயிர் மற்றும் உடமைகளை காக்கக் கூடியவர்

ஸ்ரீ மகா பைரவர்ருதர ஆலயம் சிறப்பம்சம்

கோயிலின் அனைத்து பகுதியும் மிக துல்லியமான ஆகம விதிப்படி அமைந்து பூமியின் நிலைப்பாட்டை உணர்த்துகின்ற ஆலய கட்டுமான தரிசனத்தை இங்கு காணலாம்.

பிறவியின் பாவகர்ம தோஷங்களை நீக்குகிறவர் தான் இந்த பைரவர்.

இயல்பான முறையில் சீர்திருத்தம் கொண்ட தரிசன முறை இந்த கோயிலில் காணலாம்.

கடவுளுக்கு கதவு இல்லா கருவறையுடன் பயம் போக்குகின்ற பைரவராக காட்சி தருகின்றார்.

வனச்சரக மூலிகை வனம் ஒட்டி இயற்கையோடு சுவாசம் செய்யும் வகையில் கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் பாலகன் தோற்றத்தில் ஷேத்ர பால பைரவர் காட்சி தருகின்றார்.

பிறவியில் அடைந்த ஜனன முறைகளுக்கு விமோசன பலன்! (அரிசி கொண்டு வருதல்).

பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

கோயில் முகவரி:

ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயம், 
ஸ்ரீ பைரவர் நகர், ஈச்சங்கரனை, 
பட்ரவாக்கம், திருவடி சூலம் ரோடு, 
மகேந்திரா வேர்ல்டு சிட்டி, 
செங்கல்பட்டு, தமிழ் நாடு - 603002

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top