கல்வி கடவுள் சரஸ்வதி தேவி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கல்வி கடவுள் சரஸ்வதி தேவி பற்றிய பதிவுகள் :

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான்.

சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

ஆயுத பூஜை:

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அறுபத்து நான்கு கலைகள்:

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என" உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்"

என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன் படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது.

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். 

1. கலைமகள், 
2. ஞானவாகினி, 
3. தூயாள், 
4. பிராமி, 
5. இசை மடந்தை, 
6. காயத்ரி, 
7. சாரதா, 
8. வெண்டாமரையாள், 
9. ஞானக்கொழுந்து, 
10. ஆதிகாரணி, 
11. சகலகலாவல்லி, 
12. வாணி, 
13. பனுவலாட்டி, 
14. பாமகள், 
15. பாமுதல்வி, 
16. பாரதி, 
17. நாமகள், 
18. பூரவாகினி, 
19. ஞான அமிலி நாமகள், 
20. கலை மங்கை, 
21. வாணி, 
22. கலை வாணி, 
23. பார்கவி, 
24. சரஸ்வதி, 
25. பாரதி, 
26. சகலகலா வல்லி, 
27. பிரம்மதேவி, 
28. வேத நாயகி, 
29. ராஜ மாதங்கி, 
30. நீலதாரா, 
31. சித்ர தாரா, 
32. சியாமளா, 
33. ராஜ சியாமளா, 
34. வாக்வாதினி, 
35. வாகதீஸ்வரி, 
36. நயவுரை நாயகி, 
37. ஞான ரூபிணி, 
38. வித்யா 
39. வித்யா தாரணி ஆகியன ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top