நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துளசி வழிபாடு பற்றிய பதிவுகள் :
துளசியின் அருமை பெருமைகளை சொல்லித்தான், அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. துளசியின் மகத்துவமும், புனிதத் தன்மையும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
துளசியில் மருத்துவ குணம் ஏராளமாக அடங்கி உள்ளது. இந்த மருத்துவ குணம் நம் உடலுக்குள் ஊடுருவி செல்ல வேண்டுமென்றால் துளசியை காதுக்கு பின்னால் வைப்பது மிகவும் நல்லதொரு முறை.
சூரிய ஒளி விழுகின்ற இடத்தில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்பது ஆச்சாரியரின் போதனை. நம்முடைய வீட்டைவிட தாழ்ந்த மட்டத்தில் இல்லாமல், சற்று உயரமான அளவில் துளசி செடியை அமைத்துக்கொள்வது மிகச் சிறப்பான ஒன்று.
துளசிச் செடியை வீட்டில் தினம்தோறும் மூன்று முறை வலம் வர வேண்டும். தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
துளசியை வலம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
‘பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்’
சுவாமிக்கு சூட்டுவதற்காக துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
‘துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே’
மாலை நேரத்திலும், ஏகாதேசி அன்றும், செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும், துளசி இலைகளை தயவுசெய்து பழிக்காதீர்கள்.
Post a Comment