மஹா விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள் பற்றிய பதிவுகள் :

1.மச்ச அவதாரம் :

உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய ஒற்றை உயிரினமாகிய கடல் உயிரினம் தான். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது மச்சாவதாரம்.

2.கூர்ம அவதாரம் :

ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது கூர்ம அவதாரம்.

3. வராக அவதாரம் :

பாலூட்டி உயிரினம் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம்.

4. நரசிம்ம அவதாரம் :

பாதி மிருகம் பாதி மனிதன். பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது.

5.வாமண அவதாரம் :

குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்.

6. பரசுராம அவதாரம் :

மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.

7. ராம அவதாரம் :

விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துரைக்கிறது.

8. பலராம அவதாரம் :

வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.

9. கிருஷ்ண அவதாரம் :

சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள், தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.

10.கல்கி அவதாரம் :

எப்போது எந்த நோக்கத்தில் எதனை உணர்த்த இந்த அவதாரம் எடுக்கப்படும் என்பதை நாம் பகவானிடத்திலேயே முழு உள்ளத்துடன் சமர்பிப்போம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top