தீபங்களும் அவை ஏற்றும் திசைகளின் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபங்களும் அவை ஏற்றும் திசைகளின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

1. கிழக்குத்திசை: 

கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும். 

2. மேற்குத்திசை: 

மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை, கிரக தோஷம், பகை நீங்கும். 

3. வடக்குத் திசை: 

வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும். 

4. தெற்குத்திசை: 

தெற்குத் திசையில் தீபம் ஏற்றினால் நோய், பிணி, பீடை, குடும்ப ஒற்றுமையின்மை உண்டாகும்.

விளக்கேற்றும் தீபத்தின் முகங்களுக்குரிய பலன்கள்: 

1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால் - மத்திம பலன். 

2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும். 

3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும். 

4. நான்கு முகங்கள் ஏற்றுவதால் - பசு, பூமி, பாக்கியம் தரும். 

5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால் - செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும். 

விசேஷ காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும். 

தீப வழிபாடு: 

அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top