சிவ தரிசனமும் மற்றும் சிவ விரதங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவ தரிசனமும் மற்றும் சிவ விரதங்களும் பற்றிய பதிவுகள் :

சிவ தரிசனத்திற்கு உகந்த நேரம் பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் சிவனை வழிபடுவதால் அனைத்துக் கஷ்டங்களும் விலகி செல்வ செழிப்பான வாழ்வு மலரும் என்பது நம்பிக்கை.

திரியோதசி மற்றும் தேய்பிறை திரியோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையுள்ள காலமே பிரதோஷ காலமாகும். அப்போது சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நடனம் புரிந்து தேவர்களுக்குத் தரிசனம் தந்தருளுவதாக நம்பிக்கை.

சிவபெருமானின் அருளைப்பெற விரும்புகிறவர்கள் எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது அருளைப் பெறலாம்.

• சோமவார விரதம் - திங்கள் தோறும்

• உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை

• பௌர்ணமி விரதம்.

• திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை.

• மஹா சிவராத்திரி விரதம் - மாசி மாத தேய்பிறை சதுர்தசி.

• கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்

• பாசயத விரதம் - தைப்பூசம்.

• அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி.

• கேதார கௌரி விரதம் - ஐப்பசி அமாவாசை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top