ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்ல நேரம், வழிபடும் முறை, பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்ல நேரம், வழிபடும் முறை, பலன்கள் பற்றிய பதிவுகள் :

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். 

அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.

அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

வழிபடும்முறை

ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத மக்கள் கவலைப்பட வேண்டாம். ஆற்றுக்கு செல்ல முடியாதவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடுவோம்.

பலன்கள்

ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.

ஆடிப்பெருக்கு எப்போது?

சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு தினம் 2023 ம் ஆண்டில் ஆகஸ்ட் 03 ம் தேதி வியாழக்கிழமையன்று வருகிறது. அன்று துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது. வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை துவங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது.

ஏன் கொண்டாடுகிறோம்?

ஆடி மாதம் என்பது மழைக்காலத்தின் துவக்கமாகும். இந்த மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் கரை புரண்டு ஓடி வரும். காவிரியில் நீர் பெருகி வரும். எனவெ அந்த நாளை வரவேற்கும் விதமாகவும் காவிரி அன்னையை வணங்கும் விதமாகவும் இந்த ஆடிப்பெருக்கு நாளை நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளை அடிப்படையாக வைத்தே விவசாயிகள் விதை விதைப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆடி மாதம் 18ஆம் தேதி வரும் ஆடிப் பெருக்கு விழாவில் மங்களம் பெருக, சகல செல்வங்களும் பெருக, வேளாண்மை செழிக்க, உழவர் செழிக்க காவிரியைத் தாயாக நினைத்து மக்கள் வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலைகளை காவிரிக்கு சமர்ப்பித்து, வழிபாடு செய்து, தாலியைப் பெருக்கி அணிந்து கொள்வார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top