வீடு மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வீடு மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள் பற்றிய பதிவுகள் :

தென் நாட்டில் இன்றைக்கு நமக்கு கிடைக்கும் அளவிற்கு உலோகங்களும், விளக்குகள் செய்வதற்கான உபகரணங்களும் அன்றைய காலங்களில் இல்லாததால் மக்கள் அனைவரும் பரம்பொருளான இறைவனை அகல் விளக்கு என்னும் மண் விளக்கின் உதவியுடன் கண்டு மகிழ்ந்தனர். அகல் விளக்குகள் அளவில் சிறியதாகவும், எங்கும் எடுத்துச் செல்ல எளியதாகவும் இருக்கும்.

பின் கால வளர்ச்சியின் காரணமாக அந்த அகல் விளக்கில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வெவ்வேறு வடிவங்களில் பல முகங்கள் கொண்டு செய்யப்பட்டு வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டன.

உலோகங்களின் வருகையால் அகல் விளக்குகளின் பயன்பாடுகள் குறைந்து உலோகத்தால் ஆன விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. உலோகத்தால் ஆன விளக்குகள் உயரமாகவும், எண்ணெய் கொள்ளளவு அதிகம் கொண்டதாகவும் செய்யப்பட்டன. 

விளக்குகள் செய்ய பித்தளை, வெண்கலம் மற்றும் ஐம்பொன் போன்ற உலோகங்கள் பின்னாளில் பயன்படுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. குத்துவிளக்குகள் மற்றும் கிளை விளக்குகள் பல்வேறு வடிவங்கள் மற்றும் உயரங்களில் செய்யப்படுகின்றன. அவை குத்துவிளக்கு, கிளை விளக்கு, பஞ்சலோக விளக்கு மற்றும் காமாட்சி விளக்கு என ஏராளமான விளக்குகள் உள்ளன.

மானிடர்களுக்கு ஐம்புலன்கள் இருப்பதை போல குத்து விளக்குகளிலும் ஐம்புலன்களை நம் முன்னோர்கள் காண்பிக்கின்றனர். நம் ஒவ்வொரு புலன்களிலும் இறைவன் வாசம் செய்வதை போன்று குத்துவிளக்குகளிலும் மும்மூர்த்திகளும், தேவிகளும் வாசம் செய்வதாக நம் சான்றோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

குத்துவிளக்கின் அடிப்பகுதி - படைப்புக் கடவுளான பிரம்மா

குத்துவிளக்கின் (தண்டுப் பகுதி) நடுப்பகுதி - காக்கும் கடவுளான விஷ்ணு

குத்துவிளக்கின் உச்சிப் பகுதி - மோட்சம் அருளும் பரம்பொருளான சிவன்

குத்துவிளக்கில் உண்டாகும் ஒளிச்சுடர் - பொருட் கடவுளான மகாலட்சுமி 

குத்துவிளக்கில் உண்டாகும் வெளிச்சம் - அறிவுக் கடவுளான சரஸ்வதி

குத்துவிளக்கில் உண்டாகும் வெப்பம் - அன்னையான பார்வதி தேவி வாசம் செய்கின்றார்

ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கே இறை வழிபாட்டிற்கு சிறந்தது.

கிளை விளக்கு :

குத்து விளக்கில் பல கிளைகள் செய்யப்பட்டு சங்கிலியால் இணைக்கப்பட்டு இருக்கும். மேல் உள்ள விளக்கின் உச்சியில் மயில், அன்னம் மற்றும் இறைவனின் வடிவங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top