அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் பற்றிய பதிவுகள் :

1. மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டக்கூடாது.

2. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யக்கூடாது.

3. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தம் செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

4. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு, வாழை இலை போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

5. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது 3 வெற்றிலை, 1 பாக்கு என்ற எண்ணிக்கையில்‌ வைக்க வேண்டும்.

6. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

7. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது சிறப்பு.

8. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

9. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

10. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top